Entry: Recollecting my teaching experiences (1997) - 2 Dec 30, 2003



ஆசிரியர் வேலை என்பது புனிதமான ஒரு பணி என்று பரவலாகச் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இங்கு, அதுவும் இராமகிருஷ்ணா பள்ளியில் வேலை செய்ய ஆரம்பித்தபோது இதனை உணரமுடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். நான் முன்னரே குறிப்பிட்டது போல ஆசிரமத்திலிருந்து  எனது வகுப்பில் ஆறு குழந்தைகள் படித்து வந்தனர். அதில் விஜி ஒரு மாறு பட்ட குணம் உள்ள ஒரு பெண்.

9 வயது பெண் குழந்தையைப் போல இவள் இருக்க மாட்டாள். ஒரு பாடத்தை ஆரம்பித்து இரண்டு நிமிடம் முடிவதற்குள் அவள் ஏதாவது ஒரு பைத்தியக்காரத்தனமான ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பாள். இப்படித்தான் ஒரு நாள். மாணவர்களை எல்லாம் அழைத்து வைத்து ஒரு
மூலையில் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தேன். (என்ன பாடம் என்று தெரியவில்லை. மறந்து விட்டது.) திடீரென்று மாணவர்கள் எல்லாம்  பயத்தில் கூச்சல் போடுவதைப் பார்த்து திரும்பிப்பார்த்த நான் உண்மையிலேயே பயந்து விட்டேன். ஏறக்குறைய மூன்று அடி உயரம் உள்ள ஒரு ஜன்னலில்
ஏறிக் கொண்டிருந்தாள் விஜி. கதையில் அனைவரும் கவனமாக இருக்கும் போது பின்னால் சென்று மேஜை மேல் ஏறி ஜன்னலிலிருந்து ஏறிக்  குதிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தாள். இப்படிப் பட்ட சூழலில் பார்க்கின்ற நமக்கு எப்படி இருக்கும்? ஒரு வகையாக  அவளை இறக்கி கீழே கொண்டு வந்து சேர்த்தேன்.

இவளது குறும்புகள் சில வேளைகளில் எல்லை மீறி விடும். பல முறை தொடர்ந்து இவள் கொடுக்கும் நச்சரிப்பால் மற்ற மாணவர்கள்  சிரமப்படுவதைப் பார்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் குறை கூறியிருக்கின்றேன். ஆனால் படிப்படியாக ஒரு சில மாதங்களில் எனக்கு அவள்  மேல் அலாதியான அன்பு ஏற்பட்டு விட்டது. அது எப்படி என்பது எனக்கே தெரியவில்லை.

வகுப்பில் மிகச் சிறப்பாகப் படிக்கக் கூடிய மாணவியாக ஒரு சில மாதங்களிலேயே அவள் மாறிவிட்டாள். ஆனாலும் அவளது தாங்க முடியாத  குறும்புகள் மட்டும் சிறிதும் மாறவில்லை. அது அவளுக்குறிய தனித்துவம். அதனை மாற்றிக் கொள்ள அவள் விரும்பவில்லை போலும்.

ஆசிரியர் பயிற்சியின் போது படித்த பல உளவியல் முறைகளை நான் இவளிடம் பயன்படுத்தியிருக்கின்றேன். அனைத்திற்கும் சவாலாக இவளது செயல் அமைந்து விடும். ஆனால் அதிகமான மாற்றங்களை படிப்படியாக அவளிடத்தில் காண முடிவதாக மற்ற மாணவர்களே என்னிடம் சொல்வார்கள்.

நல்ல திறமை இருந்தாலும் ஆசிரமத்தில் வாழும் போது தனிப்பட்ட கவனிப்பு என்பது இவ்விதமான குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. பற்பல காரணங்களுக்காக பெற்றோர்களை இழந்த நிலையில் வாழ்கின்ற குழந்தைகள் இவர்கள். மற்றவர்கள் அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு
தங்களின் மேல் கவனம் வருமாறு செய்வதற்காக தன்னை அறியாமலேயே இம்மாதிரியான குழந்தைகள் பல வகை விஷயங்களை முயற்சி செய்கின்றனர். விஜியின் சேஷ்டைகள் அதில் புது விதம்.
 

   4 comments

miglena
August 25, 2005   02:54 PM PDT
 
good page http://www.g888.com
¸¡÷ò¾¢ì§¾Åý
December 31, 2003   06:40 AM PST
 
¯ñ¨Á¾¡ý .
Suba
December 30, 2003   01:37 PM PST
 
¦Áñ¨ÁÂ¡É ÌÆó¨¾¸Ç¢ý ÁÉõ þõÁ¡¾¢Ã¢Â¡É ÀÄÃÐ ¾ÅÈ¡É ¦ºÂø¸Ç¡ø ¸¡ÂôÀðÎÅ¢ÎÅÐ ¦¸¡Î¨Á¢Öõ ¦¸¡Î¨Á þø¨Ä¡..?
karthikdevan
December 30, 2003   08:39 AM PST
 
þ¨¾ ÀÊìÌõ §À¡Ð ±ÉìÌõ þÕ ÌÆó¨¾¸û ¿¢¨É×ìÌ ÅÕ¸¢ýÈÉ÷. «ô§À¡¦¾øÄ¡õ ¿¡ý weekends ø ´Õ ¸¡ôÀ¸õ ¦ºøÅÐ ÅÆì¸õ. ¸¡ôÀ¸õ was at a nascent stage. «Å÷¸û ´Õ ¬º¢ÃÁò¾¢Ä¢ÕóÐ þíÌ Åó¾¡÷¸û.

´Õ ¦ÀñÁ½¢ ÁðÎõ º¨ÁÂÖìÌ þÕó¾¡÷. À¢ÈÌ ¿¡í¸û «ó¾ project ³ ¨¸Å¢ðΠŢ𧼡õ. ¸¡Ã½õ ÓØ §¿ÃÓõ ¸ÅÉ¢ì¸ ¾Ìó¾ ¬û þøÄ¡¾Ð ¾¡ý.

«ó¾ô¦ÀñÁ½¢Ôõ Ó츢 ¸¡Ã½õ. «Å÷ ¾ÁÐ Å¡úÅ¢ý frustration ³ ±øÄ¡õ «ìÌÆó¨¾Â¢ý Á£Ð ¸¡ñÀ¢ì¸ ¬ÃõÀ¢ò¾¡÷, þ¨¾ì¸ñ¼ ¿¡í¸û, þ¨¾Å¢¼ «ìÌÆó¨¾¸û ź¾¢ ̨ÈÅ¡¸ þÕó¾¡Öõ À¨ÆÂ þ¼ò¾¢§Ä§Â þÕôÀÐ §Áø ±ýÚ ÓÊ× ¦ºö§¾¡õ.

«ó¾ì ÌÆó¨¾¸Ç¢ý «ýÒì¸¡É ²ì¸õ.... «ôÀôÀ¡... ¿¢¨É×ìÌ ÅÕõ§À¡¦¾øÄ¡õ ¦¿ï¨ºîÍθ¢ýÈÐ.

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments